தென்னிந்திய ரசிகர்களுக்குப் பரிச்சயமான இரு பிரபலங்கள் என்றால் அது நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஜோடி தான். காதலித்து திருமணமான இவர்களின் வாழ்க்கை, ஒரு கட்டம் வரைக்கும் மகிழ்ச்சியாகவே போனது. இருவருக்கும் பிறந்துள்ள இரண்டு மகன்களுடன் குடும்பம் சிறப்பாக இருக்கும் எனப் பலரும் நம்பினர்.
எனினும், சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் என இந்தக் குடும்பம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக உள்ளது. இந்த விவகாரம் தற்போது விவாகரத்து வழக்காகவும் மாறியுள்ளது. பல மாதங்களாக நிலவி வந்த மனமுறிவுக்குப் பின், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்து அதற்கான பதிலை வழங்கும்படி ரவி மோகன் தெரிவித்திருந்தார்.
பின், இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 12, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு முக்கிய நாளாக கணிக்கப்பட்டு, இருவரது வாழ்விலும் புதிய திருப்பமாக அமையப்போவதாகவும் சிலர் கருத்துக்களை கூறியிருந்தனர்.
இந்த வழக்கைச் சுற்றி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பலவிதமான அணுகுமுறைகள், தகவல் பகிர்வுகள், விமர்சனங்கள் போன்றவை பரவி வந்தன. இதனை அடுத்து, ஆர்த்தி நேரடியாக ஒரு எச்சரிக்கை ஒன்றை தற்பொழுது விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “நீதிமன்ற உத்தரவின்படி, என் திருமண விவகாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகம், யூடியூபர்கள், இணைய வாசிகள் ஆகியோர் எந்தவிதத்திலும் பகிரக்கூடாது. ஏற்கனவே ஏதேனும் செய்திருந்தால், உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் சட்ட நடவடிக்கைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்றார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
Listen News!