• May 16 2026

கோர்டுக்கு வந்த கடவுள்.. கதறிய பாலாஜி.! என்னடா நடக்குது? கருப்பு படத்தை கிழித்த புளூசட்டை

shali / 1 hour ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் குறித்து பிரபல யூடியூபர் மற்றும் விமர்சகர் புளூசட்டை மாறன் தனது விமர்சனத்தில் கலவையான கருத்துகளை முன்வைத்துள்ளார். 

கேரளாவிலிருந்து இந்திரன்ஸ் தனது மகனுடன் சென்னைக்கு வருகிறார். மகளின் மருத்துவ ஆபரேஷனுக்காக 60 பவுன் நகையை கொண்டு வருகிறார். ஆனால் சென்னை வந்தவுடன் அந்த நகை இரண்டு திருடர்களால் திருடப்படுகிறது. போலீசில் புகார் அளித்தாலும், நகையை மீட்கப்பட்ட பின்னரும் சட்ட நடைமுறைகள் காரணமாக உடனே பெற முடியாத நிலை உருவாகிறது.


இதையடுத்து நீதிமன்ற வழக்கு தொடங்க, அங்கு வழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி அறிமுகமாகிறார். அவர் நீதிமன்றத்துக்குள் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஜட்ஜ் வரை தொடர்புகள் வைத்திருக்கும் சிக்கலான கேரக்டராக காட்டப்படுகிறார்.

இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்தில் உள்ள “கருப்பு சாமி” என்ற தெய்வீக சக்தியிடம் இந்திரன்ஸ் முறையிடுகிறார். அதன்பின் சூர்யா கடவுள் வடிவில் தோன்றி, வழக்கறிஞராக மாறி ஆர்.ஜே. பாலாஜிக்கு எதிராக வாதாடுகிறார். மனிதன் மற்றும் கடவுள் இடையிலான போராட்டம் போல கதை நகர்கிறது.

புளூசட்டை மாறனின் கருத்துப்படி, படத்தின் முதல் பாதி சில அளவுக்கு சுவாரசியமாக இருந்தாலும், இரண்டாம் பாதி முற்றிலும் குழப்பமாகவும் இழுபறியாகவும் உள்ளது. ஒரே வகை கேஸ், ஒரே நீதிமன்ற சூழல் மீண்டும் மீண்டும் காட்டப்படுவது சலிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். மனிதனை கடவுள் எதிர்கொள்வது என்ற கருத்து இருந்தாலும், அது சரியாக வளர்ச்சியடையவில்லை என்றும் விமர்சிக்கிறார்.

கிளைமாக்ஸும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், சூர்யாவின் தோற்றம் கூட புதுமை இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் சொல்கிறார். மொத்தத்தில், படம் கருத்தளவில் வித்தியாசமான முயற்சி என்றாலும், திரைக்கதை மற்றும் செயல்பாட்டில் பல குறைகள் உள்ளதாக புளூசட்டை மாறன் விமர்சிக்கிறார்.

Advertisement

Advertisement