தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நேர்காணலில், நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டநாள் விருப்பத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், “அஜித் சாருடன் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதற்காக நானும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அவரிடம் ஒரு கதையை சொல்லுவது தொடர்பாக சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுவரை அவரிடம் முழுமையான கதையை நான் கூறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அது நிச்சயமாக ஒருநாள் நடக்கும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது தனித்துவமான திரைக்கதை சொல்லும் பாணியும், அஜித்தின் மாஸான திரைமுகமும் இணைந்தால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பல வெற்றி படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ், அஜித்தை வைத்து படம் இயக்கினால் அது தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாறும் என்பதில் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!