• Aug 02 2025

சுதாகரின் உண்மை முகத்தால் அதிர்ச்சியில் பாக்கியா குடும்பம்..! பாக்கியலட்சுமி டுடே எபிசொட்!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா ஆகாஷை பார்த்து நான் போகும் போது நிதீஷ் நல்லாத் தான் இருந்தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஆகாஷ் அப்புடி என்றால் நீயும் ஆன்ட்டியும் போனதுக்கு பிறகு தான் என்னமோ நடந்திருக்கணும் என்கிறார். மேலும் இனியா தள்ளி விட்டு எல்லாம் நிதீஷ் இறக்கிறதுக்கு வாய்ப்பில்ல என்று சொல்லுறார். அதனைத் தொடர்ந்து பாக்கியா, இனியாவை பழிவாங்க எவ்வளவோ வழி இருக்கு ஆனா இந்த அளவுக்கு போவாங்களா? என்று கேட்கிறார். 

பின் இனியாவுக்கு நிதீஷ் சுதாகரின்ட சொந்த மகனே இல்ல என்ற விஷயம் தெரியவருது. அதை இனியா வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லுறார். மேலும் சுதாகருக்கும் மனைவிக்கும் இடையில நல்ல relationship இல்ல என்றும் சொல்லுறார். அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து ஆகாஷ், அப்ப கண்டிப்பாக சுதாகர் தான் நிதீஷிட்ட இருக்கிற சொத்து மேல ஆசைப்பட்டு இப்புடி பண்ணியிருப்பார் என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட செல்வி சுதாகரை பேசிக் கொண்டிருக்கிறார். பின் பாக்கியா நிதீஷோட அம்மா கிட்ட பேசினால் இதுக்கொரு முடிவு கிடைக்கும் என்று சொல்லுறார். இதனை அடுத்து ஆகாஷ் சுதாகருக்கு கால் பண்ணி நீங்க தான் நிதீஷை என்னமோ பண்ணிங்க என்ற விஷயம் எனக்குத் தெரியும் என்கிறார். அதைக் கேட்ட சுதாகர் ஷாக் ஆகுறார். 


பின் பாக்கியா சுதாகர் மனைவி கிட்ட போய் உங்களோட கொஞ்சம் பேசணும் என்கிறார். அதைக் கேட்ட சுதாகர் மனைவி நீங்க முதலில வெளியில போங்க என்று சொல்லுறார். பின் செழியன் சுதாகர் மனைவி கிட்ட cctv ஆதாரத்தைக் காட்டுறார். அதைப் பார்த்த சுதாகர் மனைவி நான் இதை நம்பமாட்டேன் என்கிறார். பின் சுதாகர் கதைச்ச எல்லா விஷயத்தையும் ஜோசிச்சுப் பார்த்து சுதாகர் மனைவி அழுகிறார். அதனை அடுத்து செழியன் அந்த ஆதாரத்தை பொலீஸுக்கும் காட்டுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement