• Apr 23 2026

அந்த குந்தவைய வீட்டுக்குள்ள குந்த வைங்க..! த்ரிஷா பற்றி பார்த்தீபன் ஓபன் டாக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் -  திரிஷா இருவரும் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்ட சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.  சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பேசுபொருளாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், திரிஷாவின் புகைப்படத்தை காட்டி கவிதை சொல்லுமாறு கேட்டபோது, “ இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளே குந்தவைத்து விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பது ரொம்ப நல்லது. அப்போதுதான் பிரச்சினைகள் குறையும்” என குறிப்பிட்டார்.

பார்த்திபனின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் நடிகர் சமுத்திரகனியும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement