தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது திரைப்படத்திக்கென ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.
மேலும் தற்போது இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே1ஆம் திகதி வெளியான திரைப்படம் "ரெட்ரோ"இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியில் ஓரளவு சாதனை படைத்து வெற்றியை பெற்றது என்று கூற முடியும்.
தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. "நல்ல திரைப்படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் என்று கூறியதோடு திரைப்படங்கள் எப்போதும் மக்களை பாதிக்காது. மக்கள் திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகின்றார்கள்.
"குடிப்பதை , சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம் ". ஏன் படம் பார்ப்பதை தடுக்க வேண்டும்? , ரசிகர்களிடம் விட்டு விடுங்கள் அவர்கள் முடிவு செய்து விட முடியும்.என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!