நடிகர் கருணாஸ் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 25 ஆண்டுகளாக நீண்ட சினிமா பயணத்தில் யாரிடமும் உதவி கேட்டு சென்றதில்லை என்ற அவர், தனது மகன் கென் கருணாஸுக்காக அதனை உடைத்த சம்பவத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “என்னோட 25 வருட சினிமா வாழ்க்கையில யாருகிட்டயும் போய் உதவி கேட்டு நின்னது கிடையாது. ஆனா என்னோட பையன் கென் படத்தோட பாட்டுக்காக ஜிவி பிரகாஷ் கிட்ட போய் உதவி கேட்டேன். பாடி தர முடியுமான்னு கேட்டேன். நீங்க நினைக்கிற சம்பளம் கொடுக்க முடியாது இருந்தாலும், என்னால முடிஞ்சத கொடுக்கிறேனு சொன்னேன்,” என்று மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இந்த உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அளித்த பதில் தான் அனைவரையும் அதிகம் நெகிழ வைத்துள்ளது. “உங்களுக்காகவும் கென்னுக்காகவும் நான் ஃப்ரீயாவே பண்ணித் தாறேன் அண்ணா. ” என்று அவர் கூறியதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். இந்த மனிதநேயமான பதில், சினிமா உலகில் இன்னும் நல்ல மனசுகள் இருக்கின்றன என்பதற்கான ஒரு அழகான உதாரணமாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம், ஒரு தந்தையின் அன்பையும், தனது மகனின் கனவை நிறைவேற்ற எந்த அளவுக்கும் செல்ல தயாராக இருக்கும் மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. கருணாஸ் போன்ற அனுபவம் மிக்க நடிகர் கூட, தனது மகனின் முன்னேற்றத்திற்காக தாழ்மையுடன் உதவி கேட்கும் தருணம், பலரையும் நெகிழச்செய்துள்ளது.
அத்துடன், கென் கருணாஸ் இயக்கி, எழுதி, நாயகனாக நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!