தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா, ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்படும் நடிகை. திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு, அழகு மற்றும் ஸ்டைல் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நயன்தாரா, 2022ம் ஆண்டு ஜூன் 9ம் திகதி தனது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடி இன்று (ஜூன் 9, 2025) மூன்றாவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றது. இதனை நினைவாக வைத்துக் கொண்டு, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமண வாழ்க்கையில் மூன்று ஆண்டுகளை கடந்தாலும், இவர்கள் இருவருக்கும் உள்ள காதல் நாளுக்கு நாள் புதிதாகவே காணப்படுகிறது. இதை உணர்த்தும் வகையில், நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
ஒரு புகைப்படத்தில், விக்னேஷ் சிவன் புன்னகையுடன் நயன்தாராவை பார்ப்பது போலவும், மற்றொன்றில் நயன்தாரா அவரை கட்டிப்பிடித்து நெருக்கமாக உள்ள படம் போலவும் காட்சியளிக்கின்றன. புகைப்படங்களோடு இணைந்து, நயன்தாரா பதிவிட்ட மெசேஜ் கூட ரசிகர்களை உருக வைத்துள்ளது.
Listen News!