தமிழ்நாட்டின் அரசியல்வாதி, நடிகர், மக்கள் நாயகன் எனப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் தங்கி வாழும் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு பிறகு, அவரது வாழ்க்கையில் மறைந்திருக்கும் சில உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்றாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த், சமீபத்தில் அளித்த ஒரு உருக்கமான பேட்டியில் விஜயகாந்திற்கு இருந்த ஆசைகள் குறித்து பகிர்ந்திருக்கிறார். இது கேப்டனின் ரசிகர்களை மட்டுமல்ல, பெற்றோராக இருக்கும் அனைவரையும் நெகிழ வைக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
“நான் படிக்கல… நீ படிச்சிருக்க… ரெண்டு பசங்களையும் படிக்க வச்சு, கிராஜுவேட் ஆக்கிடு...” இது தான் கல்யாணத்திற்கு பிறகு விஜயகாந்த் என்னிடம் கேட்ட ஒரே ஒரு ஆசை என்றார் பிரேமலதா. அவர் மேலும், “என் பசங்களுக்கு நானே டியூசன் எடுப்பேன். படிக்கலனா அடிவிழும்! அவங்க இப்போ என் கணவரின் ஆசையை நிறைவேற்றி விட்டாங்க.” என்றார்.
விஜயகாந்த் தன்னுடைய பள்ளிக்கல்வியை நிறைவு செய்யாமலேயே திரையுலகில் காலடி வைத்தவர். ஆனால் வாழ்க்கையின் போக்கில் அவர் கல்விக்கு உள்ள மதிப்பு என்ன என்பதை தெளிவாக உணர்ந்தவர். அதனால் தான் தனது பிள்ளைகள் இருவரையும் கற்றறிந்து, தங்களுக்கு பிடித்த துறையில் மேன்மை அடைய வழி செய்துள்ளார்.
Listen News!