பொதுவாக அழகு மற்றும் மாடலிங் என்பன பெண்களுக்கு மட்டுமல்லாமல் இன்று குழந்தைகளுக்கும் அந்த திறமை மற்றும் நம்பிக்கை உருவாகி வருகின்றது. அந்தவகையில் இந்தியாவின் முக்கியமான அழகுப் போட்டிகளில் ஒன்றான தேசிய அளவிலான "ஆணழகன்" போட்டி, சமீபத்தில் கோவாவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாடு முழுவதும் வந்த சிறுவர்களை பின்னுக்கு ஒதுக்கி விட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவர்களான ருத்ரேஸ்வரன், அக்ஷுப் தர்சன், விஷ்ணு ஆகியோர் வெற்றி வெள்ளத்தில் மிதந்துள்ளனர். இதில் ஒருவர் முதல் பரிசு வெற்றியும், மற்றொருவர் இரண்டாம் பரிசையும் பெற்றதோடு, இந்த வெற்றி தமிழ்நாட்டின் கௌரவத்தையே உயர்த்தியுள்ளது.
8 முதல் 14 வயத்திற்குள் உள்ள சிறுவர்கள் இந்தப் போட்டியில் ramp walk போன்ற கட்டங்களை கடந்து சென்றனர். இவற்றில், அழகுடன் கூடிய நடையுடன் அந்த சிறுவர்கள் பரிசைத் தட்டிச்சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் பின் அவர்கள் கலந்த நேர்காணலில், " இந்த வெற்றியை முதன்மைப்படுத்திக் கொண்டு மேலும் முன்னேறுவோம்." என்றும் கூறியிருந்தனர்.
இந்த போட்டியின் போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது Instagram Reels, YouTube Shorts ஆகியவற்றில் பறக்கின்றன. இதுவரை 2 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் இப்பதிவினைப் பார்த்துள்ளனர்.
Listen News!