• May 23 2025

மூனு மீனை நடிச்சே கொன்னுட்டேன்.. அரண்மணை 4 படத்தின் Bakk Ghost சுவாரஸ்ய பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் அரண்மனை 4. இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி  இயக்கி நடித்து இருந்தார். அவருடன் நடிகை தமன்னா, ராசி கன்னா, ஜோகி பாபு, கோவை சரளா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து இருந்தார்கள்.

கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்திருந்தது. இந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாமே தோல்வியை தழுவிய நிலையில், பிற மொழிகளில் வெளியான படங்கள் மட்டும் சக்கை போடு போட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் அரண்மனை 4 படம் வெளியாகி ரசிகர்களுக்கு ராஜ விருந்து கொடுத்தது. அதிலும் இதுவரை வெளியான அரண்மணை படத்தில் மூன்று பாகங்களை விடவும் இந்த 4வது பாகம் முற்றிலும் வேறுபட்டதாக ஹாரர், காமெடி என கலக்கியிருந்தது.


இந்த நிலையில், அரண்மணை 4ம் பாகத்தில் ஆரம்பக் காட்சியில் பார்க் பேயாக நடித்த ஹர்ஷா பேட்டி வழங்கியுள்ளார். தற்போது குறித்த பேட்டி  வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், இந்த சான்ஸ் எனக்கு ஆடியன்ஸ் போய் கிடைச்சுது. அந்த சீன்ல நடிக்கும் போது மூன்று மீனை நான் கொன்னுட்டேன். அந்த சீனுக்கு நடிக்க போனபோது கொஞ்சம் டிலே ஆச்சு. என்ன நடந்தது என்று கேட்டால், அப்பத்தான் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார்கள்.


அதற்குப் பிறகு நான் அந்த சீனில் நடிக்கும் போது கிட்டத்தட்ட மூன்று மீன்களை கொன்றே விட்டேன். அதாவது அந்த சீனில் மீன் துடிக்க வேண்டும் ஆனால் நான் நடிக்கும் போது இறந்து விடுகிறது. நான்காவது, ஐந்தாவது காட்சிகளில் தான் அந்த சீன் சரியாக அமைந்தது என்றார். 

மேலும் உண்மையாகவே மீனை கடித்தீர்களா என்று கேட்க, இல்லை அதில் நுங்கு வைக்கப்பட்டது. அதற்கு சிகப்பு கலரிங் போடப்பட்டதாகவும் அதைத்தான் கடித்ததாகவும் ஹர்ஷா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement