• Aug 28 2025

அம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுக்கும் நடிகை நளினி...! வைரலாகும் வீடியோ...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நடிகை நளினி, சமீபத்தில் மடிப்பிச்சை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளார். இந்த பரம்பரையாக உள்ள ஆன்மிகச் செயலுக்கு பின் ஒரு கனவின் விந்தை உண்மை உள்ளது என்று அவர் கூறுகிறார்.


நடிகை நளினி அளித்த விளக்கத்தில், “ஒரு இரவில் அம்மன் என் கனவில் வந்து, 'எனக்காக நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டாள். அந்தக் கனவுக்கு பின் மனதளவில் அமைதியும் ஆனந்தமும் ஏற்பட்டது. அதன் பின் என்னால் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் இன்று திருவேற்காடு கோவிலில் மடிப்பிச்சை எடுத்து, பக்தர்களிடமிருந்து வரும் காணிக்கையை அம்மனுக்கே அர்ப்பணிக்கிறேன்” என தெரிவித்தார்.


மடிப்பிச்சை என்பது, பக்தி உணர்வோடு அம்மனின் சேவையில் ஈடுபடும் ஒரு பாரம்பரியமான வழிபாட்டு செயலாகும். இது வழியாக பக்தர்கள் தங்கள்  நம்பிக்கையை வெளிப்படுத்துவதைத் தவிர, ஆன்மீக பண்பாட்டு மரபுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. நளினியின் இந்த செயல் திருவேற்காடு கோவிலில் வந்த பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பலர் நளினியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, அவரது ஆன்மீக உணர்வையும் பாராட்டினர். அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்களுடன், நளினியின் பக்தி எல்லோருக்கும் முன்னுதாரணமாக அமையட்டும்!

Advertisement

Advertisement