தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜய். இவர் அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து அதன் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் மாநில அளவில் நல்ல மதிப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
அதன் போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, இந்திய அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான ஜேஇஇ (JEE) தேர்வில் வெற்றி பெற்று, ஐஐடியில் உயர்கல்விக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரை பாராட்டும் விதமாக, த.வெ.க தலைவர் விஜய், ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி, அவரது கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் ராஜேஸ்வரி தனது தொடக்கக் கல்வியை முடித்தார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், இன்றைய கல்வி சூழலில் ஐஐடி போன்ற உயர்நிலைக் கல்விகளை படிப்பது சாத்தியமே இல்லை என கருதப்படும் சூழலில், தன்னம்பிக்கையுடன் படித்து அதில் சாதனை படைத்துள்ளார்.
அத்தகைய மாணவிக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கியதனை பலரும் பாராட்டுகின்றார்கள். சிலர் விஜய் இதுபோன்ற சமூக சேவைகளை தொடர்ந்து செய்யவேண்டும் என்ற கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!