• May 18 2025

நடு வீட்டில் அசிங்கப்பட்ட கோபி.. பெட்டியை கட்டிய ராதிகா! பாக்கியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், பாக்கியா இனியா, ஜெனி, அமிர்தா எல்லாரும் கிச்சனில் இருக்க, என்னையா வெளிய போக சொல்லுறா என எழில் பற்றி ஈஸ்வரி, ராமமூர்த்தியிடம் சொல்லுகிறார். எழிலும் ஆமா நான் தான் போக சொன்னேன் என்று சொல்லுகிறார்.

எல்லாரும் ஒன்று சேர்ந்து கோபியை வெளியே போகுமாறு சொல்கிறார். இறுதியாக ஈஸ்வரியும் உன் பிள்ளைகள்ட அடி வாங்க முதல் வெளியே போகுமாறு சொல்ல, ராதிகா உடனே போய் பெட்டியை எடுத்து வைக்கிறார்.


ரூம்க்கு போனதும் ராதிகா பேச, இன்னும் ஒரு முறை அம்மாவிடம் பேசி பார்க்கிறேன் என சொல்ல, ராதிகா கோபிக்கு திட்டுகிறார்.

இறுதியாக ராமமூர்த்தியிடம் எழிலும், செழியனும் கோபியை வெளியே போக சொன்னதுக்கு விளக்கம் சொல்ல, பாக்கியாவும் தனது கவலையை பற்றி சொல்லுகிறார். 

அதற்கு ராமமூர்த்தி நீங்க எல்லாம் இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இல்லை. கோபிட அப்பா, அம்மாவ நாளைக்கு நீ வெளியே போக சொன்னாலும் நாங்க போக தான் வேணும் என சொல்ல, பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எபிசோட்.




Advertisement

Advertisement