• May 18 2025

நான் எச்சிப் பிளேட்டை கழுவும் போது ரஜினி சார் சொன்னது இது தான்! வெங்கடேஷ் பட் பகிர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கடேஷ் பட் புகழ்பெற்ற இந்திய சமையல் கலைஞர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இவர் Asan Memorial இல் கேட்டரிங் படித்துள்ளதோடு கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அதற்குப் பிறகு சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் சார்ந்த படிப்பை முடித்து முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமையல்காரர் என்ற புகழோடு காணப்படுவதோடு ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன் வரை பயணித்து வந்த வெங்கடேஷ்,  திடீரென ஐந்தாவது சீசனில் இருந்து விலகி சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நான் சோழா ஹோட்டலில் ட்ரைனியாக இருந்தபோது ரஜினி சார் அடிக்கடி சாப்பிட வருவார். அப்போது நான் எச்சிப் பிளேட்டை  கழுவிக் கொண்டிருந்த போது, அவர் என்னைப் பார்த்து நீ மிகப்பெரிய ஆளா வருவேன்னு சொன்னார். அவர் தெய்வத்துக்கு சமமானவர் என்று தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் பட். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement