இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், தனது அழகு மற்றும் திறமை மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்று இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

குறிப்பாக தெலுங்கில் வெளியான சீதா ராமம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், தனது அன்றாட நிகழ்வுகள், படப்பிடிப்பு தருணங்கள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், தற்போது மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் தோற்றத்திலும், நேர்த்தியான உடை அலங்காரத்திலும் அவர் காட்சியளித்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.
புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன. தற்போது இந்த புகைப்படங்களே இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
Listen News!