• Jun 01 2025

வெளியானது ‘படையாண்ட மாவீரா’ படத்தின் டிரெய்லர்! மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உணர்வும், உறுதியும் நிரம்பிய ஒரு புதிய திரைப்படம் தயாராகி வருகின்றது. “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் 1998ம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான வ.கௌதமன், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையுலகிற்கு வந்துள்ளார். ஆனால் இந்த முறை, வெறும் இயக்குநராக மட்டும் அல்ல; கதையின் முன்னணி ஹீரோவாகயும் நடிக்கின்றார்.


இப்படத்தின் பெயர் “படையாண்ட மாவீரா”. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, நாட்டுப்பற்று நிரம்பிய வீரக் கதையை சொல்லும் திரைப்படமாக அமைகின்றது. வி.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படம், தமிழனின் மண்ணையும், மானத்தையும் காக்க துணிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகியுள்ளது. சமூக அநீதி, நில உரிமை, பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் பின்னணியாக அமைந்துள்ள இப்படம், வீரமும், உணர்ச்சியும் கலந்த ஒரு உண்மையான வாழ்க்கைப் பயணம் எனக் குறிப்பிடப்படுகிறது.


இந்தப் படத்தில் மிகுந்த அனுபவமும், திறமையும் கொண்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்களாக, சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான்,இளவரசு மற்றும் தீனா போன்றவர்கள் காணப்படுகின்றனர். அத்துடன் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஆரம்ப அறிவிப்பில், 2025 மே 23ம் திகதி இப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றம் இப்படத்திற்கு தடை பிறப்பித்ததால் வெளியீட்டுத் திகதியில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், 'படையாண்ட மாவீரா' படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Advertisement

Advertisement