தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக நடித்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் உணர்வுபூர்வமான கதையம்சத்துடன் மட்டுமல்லாமல் வணிக ரீதியிலும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
திரைப்படத்தில் ராதிகா சரத்குமார் முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரின் நடிப்பு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள இந்த படம் குடும்ப உறவுகள், பாசப்போராட்டங்கள் மற்றும் பெண்களின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘தாய்க்கிழவி’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.25 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
60 வயதுக்கு மேற்பட்ட நடிகை ஒருவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் இவ்வளவு பெரிய வசூல் சாதனை புரிவது அபூர்வமானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!