• Apr 17 2026

கடும் அதிர்ச்சியில் 'ஜனநாயகன்' படக்குழு.! விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்திய குமுறல்!

shali / 6 days ago

Advertisement

Listen News!

ஜன நாயகன் திரைப்படம், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.


இந்த நிலையில், படத்தின் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிலிருந்து மீள்வதற்குள், மேலும் பெரிய பிரச்சனையாக 3 மணி நேரம் 3 நிமிடங்கள் கொண்ட பதிப்பு இணையத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது படக்குழுவுக்கு மட்டுமல்லாமல், முழு திரையுலகிற்கும் ஒரு பெரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் இதே போன்ற அனுபவத்தை சந்தித்ததாக கூறிய அவர், இப்படியான சம்பவங்கள் ஒரு கலைஞருக்கு மிகுந்த வேதனையையும் இழப்பையும் தரும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஒரே ஒருவரை மட்டுமல்லாமல், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரின் கனவுகளையும் உழைப்பையும் பாதிக்கும் விஷயமாகும் என அவர் வலியுறுத்தினார்.

மொத்தத்தில், இந்த இணைய கசிவு சம்பவம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கு பின்னால் உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement