இன்று, 'மாமன்' திரைப்படம் தனது திரையரங்குப் பயணத்தில் 30வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. இந்த சந்தோஷமான செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகர் சூரி, தனக்குள் இருக்கும் நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
‘மாமன்’ திரைப்படம், எந்த ஹைபர் பப்ளிசிட்டியும் இல்லாமல், மிகவும் சாமர்த்தியமான ஒரு ஆரம்பத்துடன் திரையரங்குகளில் களமிறங்கியது. பிரமாண்ட விளம்பரங்கள், ஃபைட் சீன்கள், CG டெக்னாலஜி இல்லாமலேயே, படத்தின் உணர்வுபூர்வமான உள்ளடக்கம், குடும்ப ரசிகர்களின் இதயத்தில் நேரடியாக இடம்பிடிக்க ஆரம்பித்தது.
“முதலில் படத்தைச் சுமாரான அளவில் பார்த்த மக்கள்,பின் தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அழைத்துச் சென்று பார்த்தார்கள். இப்படித்தான் ‘மாமன்’ ஒரு மெல்லிய குடும்ப அலை போல பரவி இன்று 30 நாட்கள் நிறைந்துள்ளது.” எனக் கூறுகிறார் நடிகர் சூரி.
30 நாட்களாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மென்மையான குடும்ப படம் என்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அபூர்வமான ஒன்று. குறிப்பாக சூரியின் சிறப்பான நடிப்பு, நம்பகமான கதை கூறல், உறவுச் சிக்கல்கள் ஆகிய அனைத்தும் உண்மை போல் இருந்ததால் தான், படம் பெரிய வெற்றியாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!