• Aug 28 2025

மீனா சொன்ன ரகசியத்தால் முறையாக மாட்டிக் கொண்ட ரோகிணி! விஜயா கேட்ட கேள்வி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் மீனா கிச்சனில் நின்று யோசித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ஸ்ருதி ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன நடந்தது? என்று கேட்க, சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு ரோகிணி வந்ததாகவும், அங்கு அவர் எதற்காக வந்தார் என விசாரிக்க இரண்டாவது பிரக்னன்சிக்காக வந்ததாகவும் சொன்னார்கள். இதை நீங்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என மீனா ஸ்ருதியிடம் சொல்லி அனுப்புகின்றார்.

ஸ்ருதி இதனை நேராக போய் ரவியிடம் சொல்லுகின்றார். சும்மா உளறாத யார் உனக்கு சொன்னது என ரவி கேட்க, மீனா சொன்னதாக சொல்கின்றார். அதன் பின்பு ரவி முத்துவிடம் சொல்ல முத்து அண்ணாமலையிடம் சொல்லுகின்றார்.


இறுதியாக அண்ணாமலை விஜயாவிடம் சொல்லி இந்த வீட்டில் என்ன நடக்குது என உனக்கு தெரியலையா எனக்  கேட்க, நம்ம வீட்டு மருமகளை பற்றி இப்படி பேசலாமா என ரோகிணியை கூப்பிட்டு நீ ஏற்கனவே உண்டாணியா என கோபத்தோடு கேட்கின்றார்.

இதை பார்த்து எல்லாரும் அதிர்ச்சியாக நிற்கின்றார்கள். எனவே தற்போது இந்த விடயத்தில் இருந்தும் ரோகிணி தப்பிப்பாரா இல்லாவிட்டால் உண்மையை சொல்லி மாட்டிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement