• Jun 06 2025

உயிருக்குப் போராடும் சீதா.. பதற்றத்தில் பித்துப் பிடித்து நிற்கும் மீனா அம்மா.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை மீனாவைப் பாத்து சீதா ஒரு முடிவெடுத்தால் சரியாத் தான் இருக்கும் நான் முத்து கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொல்லுறார். அதுக்கு மீனா நீங்க அவர் கிட்ட எதுவும் பேசாதீங்க நீங்க ஏதாவது கதைக்கப் போய் பிறகு நான் தான் சொன்னேன் என்று என்மேல கோபப்படுவார் என்று சொல்லுறார். மேலும் கொஞ்ச நாள் போகட்டும் நானே அவர் கிட்ட பேசி புரியவைக்கிறேன் என்கிறார்.

இதனை அடுத்து விஜயா மீனாவைப் பாத்து வீட்டில நிம்மதியா இருக்க நீயும் புருஷனும் விடமாட்டிங்களா என்று கேட்கிறார். மேலும் நேற்று முத்து குடிச்சிட்டு வந்ததுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு நீ ஏதாவது தப்பு பண்ணிட்டியா என்கிறார். அந்த நேரம் பாத்து மனோஜ் வாயில கட்டுப் போட்டுக் கொண்டு வந்து நிக்கிறார். அதைப் பாத்த விஜயா என்னடா நடந்தது என்று கேக்கிறார்.


அதனை அடுத்து ரோகிணி மனோஜ் கீழ விழுந்து தான் அடிபட்டிருச்சு என்று சொல்லுறார். மேலும் ரெண்டு நாளைக்கு வாயை திறக்கக் கூடாது என்று டாக்டர் சொன்னார் என்கிறார். அதுக்கு முத்து வாய் இருக்கு என்று கண்டதை எல்லாம் கதைச்சால் இப்படித் தான் நடக்கும் என்கிறார். அதனை அடுத்து மீனாவோட அம்மா சீதாவை சாப்பிட எழும்பச் சொல்லுறார். ஆனா சீதா எழும்பாமல் அப்புடியே கிடக்கிறாள். அதைப் பாத்த மீனாவோட அம்மா சீதாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக் கொண்டு போறார்.

அதனைத் தொடர்ந்து மீனா முத்து கிட்ட வந்து நீங்க பேசுற எதுவுமே சரியில்ல என்கிறார். அதுக்கு முத்து நான் குடிச்சால் உண்மையை மட்டும் தான் பேசுவேன் என்று சொல்லுறார். பின் மீனாவோட அம்மா போன் எடுத்து சீதாவுக்கு உடம்பு சரியில்ல என்று மீனாவுக்குச் சொல்லுறார். அதனை அடுத்து சீதாவைப் பார்க்க அருண் ஹாஸ்பிடலுக்கு வந்து நிக்கிறதைப் பாத்த முத்து ரொம்பவே கோபப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement