• Apr 07 2026

திடீரென காலமானார் கயல் சீரியல் நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்.! நடந்தது என்ன?

shali / 1 day ago

Advertisement

Listen News!

சென்னையில் பிரபல தொலைக்காட்சி நடிகை சுபாஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “கயல்” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்தார்.


இலங்கையைச் சேர்ந்த சுபாஷினி, தனது கணவர் பிப்பினுடன் பெங்களூரில் வசித்து வந்தார். ஆனால், தொடரின் படப்பிடிப்புகளுக்காக சென்னை போரூரில் தங்கி வந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் செயல்பாட்டுடன் இருந்த அவர், ரசிகர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் இரவு, தனது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொண்டிருந்தபோது குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மனவருத்தத்தால் மிகுந்த பாதிப்படைந்த அவர், ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் மட்டுமின்றி ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே திறமையான நடிகையை இழந்தது தமிழ் தொலைக்காட்சி உலகிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் மனநலம் மற்றும் குடும்ப பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு தேவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

Advertisement

Advertisement