• Jun 27 2025

உலகநாயகனின் புதிய பயணம்.. திரையிலிருந்து சட்டமேடைக்குள் கால்பதித்த கமல்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகத்தில் ‘உலகநாயகன்’ என்ற புகழுடன் பரிணமித்து, அரசியல் உலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருபவர் கமல்ஹாசன். தனது மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் வாயிலாக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் செயல்பட்டு வரும் அவர், தற்பொழுது முக்கியமான ஒரு அரசியல் கட்டத்தை எட்டியுள்ளார்.


இன்று காலை சென்னையில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை திமுக தலைமையின் ஆதரவுடன் தாக்கல் செய்துள்ளார் கமல்ஹாசன். இந்த நிகழ்வில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு முழு ஆதரவைத் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

வேட்பு மனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது உரையில் சில முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். “இது எனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம். மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற கனவுடன் இங்கு வருகிறேன்." எனவும் தெரிவித்திருந்தார். 


கமல்ஹாசன் மாநிலங்களவையில் காலடி பதிப்பது, அவரது அரசியல் பயணத்தின் மிக முக்கியமான கட்டமாகும். சிறந்த கொள்கைகள் மற்றும் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனுடன் அவர் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கின்றார் என்றால், அதுவே அவரது மநீம கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் நம்பிக்கையூட்டும் தருணமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement