• Apr 17 2026

இயக்குநராக வேண்டும் என்றால் சுயமாக சிந்திக்க வேண்டும்.. நடிகர் பாக்யராஜ் அட்வைஸ்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவரது விமர்சனங்கள் பெரும்பாலும் திரையுலகத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

சமீபத்தில் பாக்யராஜ் ரீமேக் பட இயக்குநர்கள் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்தி வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


பாக்யராஜ் அதன்போது, “இயக்குநராக வேண்டும் என நினைப்பவர்கள், சுயமாக சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களின் சட்டையை ஆல்டர் செய்து போடக்கூடாது. இது மிகப்பெரிய தவறாகும்.” என்று கூறியிருந்தார். 

இந்த கருத்து, தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்து கொண்டு வரும் ரீமேக் படங்கள் குறித்த பிரச்சனைகள் மற்றும் இயக்குநர்களின் செயல்முறைகள் குறித்து மறைமுகமாக தெரிவிக்கின்ற வகையில் காணப்படுகின்றது. 

பாக்யராஜ் தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில், இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement