• Apr 16 2026

ரஜினி–ரஞ்சித் மீண்டும் இணைகிறார்களா.? வைரலான போட்டோஸால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எந்த நடிகரோடும் ஒப்பிட முடியாத பிரபலமாகவும், ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தையும் பெற்று விளங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அத்துடன், ‘கபாலி’ மற்றும் ‘காலா’ போன்ற இரண்டு முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இந்த கூட்டணி எப்போதும் திரையரங்குகளுக்கு புதுமையான அனுபவத்தை கொண்டு வந்துள்ளது.


இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தும் பா.ரஞ்சித்தும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக ஊடகங்களில் #Rajinikanth #PaRanjith என்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன.

ரஜினிகாந்த் தற்போது பல திரைக்கதைகள் கேட்டு வருவதாக பேசப்படுகிறது. அதே சமயம், பா.ரஞ்சித் தனது புதிய படப்பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இருவரும் அதிரடியாக விமான நிலையத்தில் சந்தித்தது, சாதாரணமானதா அல்லது அடுத்த இணைப்பு தொடங்கப் போகிறதா? என்ற கேள்வியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.  


சில நிமிடங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பேசியிருப்பது புகைப்படங்களில் தெரிகிறது. இதனால் ரசிகர்களிடையே சில ஊகங்கள் எழுந்துள்ளன. 

Advertisement

Advertisement