• Jul 09 2025

திருமணமே வேண்டாம் என நினைத்தேன்.! வாழ்க்கை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசிய பிரபல நடிகை!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் 90களில் நன்கு பரிசீலிக்கப்பட்ட ஒரு Supporting நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர் பாடல்களில் தோன்றும் கவர்ச்சியான காட்சிகள், சில நேரங்களில் வில்லி கதாபாத்திரம் என பலவிதமான ரோல்களில் ரசிகர்களை கவர்ந்திருந்தவர்.


அத்தகைய நடிகை சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நேர்காணலில், தனது திருமண வாழ்க்கையை பற்றியும், அதன் பின்னணி மற்றும் அனுபவங்களைப் பற்றியும் மிக உணர்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அந்த நேர்காணலில் கூறிய சில தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் வகையில் அமைந்திருந்தது. 


விசித்ரா பேட்டியின் போது, “90களில் நான் சினிமாவில் நடித்து கொண்டிருந்த போது, எனக்கு திருமணம் நடக்குமா? எனக்கு நல்ல கணவர் கிடைப்பாரா? என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன்...சில தருணங்களில், திருமணமே வேண்டாம், சிங்கிளாகவே இருந்துவிடலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறேன்.” என்றார். 

விசித்ராவின் மனம் திறந்த இந்த பேச்சுக்குப் பிறகு, பலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement