• May 18 2025

அறிவால் பிரமாண்டம்…! ‘மையல்’ படம் குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் அதிரடி அறிக்கை.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமை மற்றும் உள்ளடக்கத்தின் வலிமையை முன்னிலைப்படுத்தும் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே. செல்வமணி, தனது தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளால் திரையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர், தற்போது தனது புதிய படம் ‘மையல்’ குறித்து வெளியிட்ட அதிரடி கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் மீடியா சந்திப்பின் போது இயக்குநர் செல்வமணி, “இரண்டு விதமான படங்கள் தான் சினிமாவில் இருக்கும். ஒன்று பணத்தால் பிரமாண்டமாக எடுக்கப்படும் படம், இன்னொன்று அறிவால் பிரமாண்டமாக எடுக்கப்படும் படம். இந்த 'மையல்' படத்தை அறிவால் பிரமாண்டமாக எடுத்துள்ளேன்." என்று கூறியுள்ளார்.


இந்த வரியின் மூலம் அவரது படத்தின் தரம், நோக்கம் மற்றும் படக்குழுவின் முழுமையான சிந்தனை பற்றிய தீவிரமான விழிப்புணர்வு வெளிப்படுகின்றது. இந்த படத்தின் மற்றொரு ஹைலைட் என்னவென்றால், 'மைனா' திரைப்படத்தில் பொலிஸாக அறிமுகமாகி, அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட  நடிகர் சேது, இப்போது ஹீரோவாக திரும்பியுள்ளார். இவர் 'மையல்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Advertisement

Advertisement