• Jun 13 2025

பூசாரியால் கலகலப்பாக மாறிய விஜயா வீடு..! முத்துவுக்கு ஹெல்ப் பண்ணும் அருண்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, திருஷ்ட்டி கழிக்க வந்த பூசாரி மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போடுறார். அதைப் பார்த்த விஜயா எதுக்காக மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போட்டனீங்க என்று கேக்கிறார். அதுக்கு அந்தப் பூசாரி இனிமேல் தான் அவருக்கு நேரம் நல்லதாக இருக்கும் என்று சொல்லுறார். அதனை அடுத்து மனோஜின்ட வாயில இருந்து பேச்சு வராததைப் பார்த்த விஜயா ரொம்பவே ஷாக் ஆகுறார்.

பின் முத்து மனோஜின்ட முதுகில அடிச்சு இப்ப பாருங்க அவன் எப்புடிக் கதைக்கிறான் எனச் சொல்லுறார். அதை மாதிரியே மனோஜும் முத்துவின்ர அடியோட கதைக்க ஆரம்பிக்கிறார். இதனை அடுத்து விஜயா மனோஜைப் பாத்து எனக்கொரு சந்தேகம் இத்தன நாளா நீ சொன்னதைத் தான் ரோகிணி சொன்னாவளா என்று கேட்கிறார். அதுக்கு மனோஜ் ஆமா அம்மா நான் சொன்னதைத் தான் சொன்னால் என்கிறார்.


இதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து பாத்தியா மனோஜ் பார்லர் அம்மாவைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறான் அந்த விஷயத்தில அவன் correct ஆ தான் இருக்கிறான் என்கிறார். பின் மனோஜ் ரோகிணிட எதுக்காக நீ நான் சொல்லாத விஷயத்தை எல்லாம் அம்மா கிட்ட போய் சொன்னீ என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி நீ எனக்காக எதுவும் பேசமாட்ட அதுதான் நான் அப்புடி சொன்னேன் என்கிறார்.

மறுநாள் முத்து காரில போகும்போது ஒரு அம்மாவோட செயினை திருடன் பறிச்சுக் கொண்டு போறார். அதைப் பார்த்த முத்து அந்த திருடனை துரத்திக் கொண்டு போறார். அப்ப அருணும் வந்து முத்துவுக்கு ஹெல்ப் பண்ணுறார். பின் ரெண்டு பேரும் சேர்ந்து அந்த திருடங்களைப் பிடிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement