தமிழ் சினிமாவின் திரைக்கலைஞராக மட்டுமல்லாது, ஒரு விரிவான சிந்தனையாளராகவும் விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன், தற்போது ஒரு மொழிச் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார். சமீபத்தில் 'தக் லைஃப்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய, "தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்" என்ற உரை, கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசியல்வாதிகள், திரைப்பட சங்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என அனைத்தும் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என அழுத்தம் கொடுத்திருந்தனர். இதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “தவறாக இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் முடியாது” என துணிச்சலுடன் கூறினார்.
இந்த சூழ்நிலையில் நடிகர் சங்கம், கமலுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து, ஒரு அதிகாரபூர்வ அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் கமல்ஹாசன் இந்திய மொழிகள் அனைத்திற்கும் உயரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துபவர். அத்தகைய நடிகருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்." எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை, தெளிவான மற்றும் துணிச்சலான செய்தியைக் கொண்டுள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லாது, தேசிய அளவில் ஒரு மெசேஜ் அளிக்கும் வகையில் காணப்படுகின்றது. இப்போது நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை, ஒரு நடிகர் மீது மக்கள் கொண்டுள்ள தவறான புரிதலினை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
Listen News!