பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா இனியாவைப் பாத்து நீ மறுபடியும் வேலைக்கு சேர்ந்ததைப் பற்றி உன்னோட friends எல்லாம் என்ன சொல்லுறாங்க என்று கேட்கிறார். அதுக்கு இனியா எல்லாரும் ரொம்ப சந்தோசப்படுறாங்க என்கிறார். மேலும் நான் இவ்வளவு நாளா வேலையை ரொம்பவே மிஸ் பண்ணேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து பாக்கியா இந்த வேலையில நீ பெரிய உயரத்திற்கு போகணும் என்கிறார்.
பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து நிறைய பெண்களுக்கு வீட்டில இருக்கத் தான் பிடிக்கும் நீதான் வேலைக்குப் போறேன் என்று திரியுறா என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு என்கிறார். பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து நீயும் கோபியும் ஒன்னா சேர்ந்து வாழலாம் தானே என்கிறார். அதுக்கு பாக்கியா ரொம்பவே ஷாக் ஆகுறார். இதனைத் தொடர்ந்து அத்த ஒன்னா சேர்ந்து முன்ன மாதிரி வாழ்ந்தால் நான் வீட்ட இருக்க கோபி வேலைக்கு போவார் அப்புடியா இருக்கிறது என்று கேட்கிறார்.
அதனை அடுத்து பாக்கியா எனக்கு எந்த ஒத்தாசைக்கும் ஆட்கள் தேவையில்ல கோபிக்கு தேவையென்றால் நீங்க வேற பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி வையுங்க என்கிறார். அதனை அடுத்து பிஸ்னஸு க்கு ஏதாவது ஐடியா கொடுக்கிறது என்றால் கொடுங்க சேர்ந்து வாழுற கதை மட்டும் வேணாம் என்கிறார் பாக்கியா.
பின் கவுன்சிலர் பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்கு வந்து நான் கேக்கிற சாப்பாட்டை செய்து கொடுங்க என்கிறார். அதனை அடுத்து பாக்கியாவும் கவுன்சிலர் கேட்ட சாப்பாட்டை செய்து கொடுக்கிறார். மேலும் என்னை ஒரு அக்காவா நினைத்து நான் சமைச்சு தாறதை சாப்பிடுங்க ஏன் வீணா தேவையில்லாத சண்டை எல்லாம் பிடிச்சுக் கொண்டிருக்கணும் என்கிறார். இதனை அடுத்து கோபியும் இனியாவும் ரெஸ்டாரெண்டுக்கு வந்து நிற்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!