பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார் அன்ஷிதா. திறமை, நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்தவர் தற்போது தனது வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றியை எட்டியுள்ளார்.
சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில், புதிய வீடு கட்டியதையும் அதன் பின்னணி கனவையும் பகிர்ந்தபோது, பலரது மனதையும் நெகிழ்ச்சியடைய வைத்தார். அவரது பதிவு ஒரு சாதாரண வீடு பற்றியது அல்ல; அது ஒரு போராட்டத்தின் நினைவாக, கடவுளின் பரிசாகவும் அமைந்தது.
அன்ஷிதா தனது வீட்டு புகைப்படத்துடன், "புதிய தொடக்கங்கள்... என் கனவு இல்லம் நிஜமாக மாறியது. இது வெறும் வீடு அல்ல, கடவுளின் பரிசு." என்பதையும் பதிவு செய்திருந்தார். பொதுவாக நட்சத்திரங்கள் பலர் வெற்றிகளை பகிரும் போது, அதனைச் சுற்றிய உணர்வுகளை பகிர மறைப்பார். ஆனால் அன்ஷிதா மிகவும் நேர்மையாக, தன்னைக் குறை கூறியவர்களுக்கும், நம்பிக்கை கொடுத்தவர்களுக்கும் ஒரே மாதிரியான நன்றி செலுத்தியுள்ளார்.
Listen News!