• Apr 20 2024

அதிக இசையை தருவேன்... ட்விட்டரில் பதிவிட்டார் யுவன்... ஆர்வத்தில் ரசிகர்கள்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையில் பயங்கரமான போதையை தரக்கூடியவர். அவரின் பாடல்களை கேட்டாலே மனதிற்கு இனிமையாக இருக்கும். 


இவரின் பாடல்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலும் இவரின் பாடல்களை பாடாத ஆட்களே இருக்க முடியாது. சிறுவர்கள் கூட ரசிக்கும் அளவில் இருக்கும். இந்த வகையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.


அதில் "எனது 26 வருட இசைப்பயணத்தை வாழ்த்தி நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி, உங்களுடைய நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி. நீங்கள் என்மீது வைத்துள்ள அன்பிற்கு மரியாதை உள்ளவனாக இருப்பேன். இந்த வருடத்தில் இன்னும் நிறைய இசையை உங்களுக்காக கொடுப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.


இந்த பதிவு ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இசைக்காக காத்திருக்கிறார்கள். இவர் சொன்னது போல இவரின் இசை இந்த வருடம் கூடுதலாக இருக்கும் என்று நம்பி காத்திருப்போம்.


Advertisement

Advertisement

Advertisement