• Apr 18 2024

முதுகில் குத்தினாலும் நல்லது செய்ய வேண்டும்- நிரூப்பை பிரேக்கப் பண்ணியதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறிய யாஷிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கவர்ச்சி ரோல்களில் அதிகம் நடித்து வந்தவர் தான் யாஷிகா ஆனந்த்.இவர் பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.மேலும் இவர் சில மாதங்களுக்கு முதல் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் இவரது நெருங்கிய தோழி உயிரிழந்தார் சில காலம் மனவருத்தத்தில் இருந்த இவர் தற்பொழுது எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக கடமையைச் செய் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்று ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சமயத்தில் கடமையை செய் படத்தின் ப்ரொமோஷனிற்காக யாஷிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், அவரின் முன்னாள் காதலரும் பிக்பாஸ் பிரபலமுமான நிரூப் நந்தகுமார் பேசிய வீடியோ போட்டு காட்டப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப், பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு ரன்னர் அப் வென்றார்.

நிரூப்பும் யாஷிகாவும் காதலித்து வந்ததாகவும், நிரூப்பிற்கு பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பு யாஷிகா மூலமாக தான் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டது. பிறகு இருவருக்கும் பிரேக் அப் ஆகி விட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் பிரேக் அப் பற்றி ஓபனாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நிரூப்.

அதில், இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். காதலர்களாக இருந்தோம். ஃபிரண்ட்சாக இருந்தோம். நமது உறவு பற்றி சொல்லி ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் எப்போதும் போல் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்திருந்தார் நிரூப். இதை கேட்ட யாஷிகா, நல்ல டயலாக் டெலிவரி. நான் சொன்ன டயலாக்கை அப்படியே அவனுடைய டயலாக் போல் பேசி உள்ளான் என்றார்.

மேலும், ஒரு பாய் ஃபிரண்ட் அல்லது கேர்ள் ஃபிரண்ட் இருப்பது லவ் கிடையாது. அதை லவ் என்றே சொல்ல முடியாது. முதுகில் குத்தினாலும் அவர்களுக்கு நல்லது செய்து விட்டு போக வேண்டும். பிரேக்கப்பிற்கு நிறைய காரணம் இருக்கு. அதில் முக்கியமானது மனது காயப்பட்டு, உடைந்து போனது தான் என ஓப்பனாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement