• Apr 20 2024

நீங்க வாழவே இல்லை எந்திரிங்க அப்பா- நடிகர் சிவநாராயண மூர்த்தி மறைவுக்கு கதறி அழுத மகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர்  சிவநாராயண மூர்த்தி. இவர் இதுவரை 300 திரைப்படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையை சார்ந்த இவர் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முருக பக்தராக இருப்பதோடு கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தொண்டராகவும் இவர் இருந்துள்ளார்.


இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் ஶ்ரீ தேவி, தந்தையின் உடலுக்கு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

இதுவரை நீங்க வாழவே இல்லை எந்திரிங்க அப்பா" என ஶ்ரீ தேவி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement