தமிழ் சினிமாவில் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினரைத் தொடர்ந்து ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி. இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அண்மையில் ரவீந்தர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் தான் வீட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ரவீந்திரன் அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இருவரும் நேற்றைய தினம் தல தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டிருந்தனர். அதை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமியை ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தல தீபாவளிக்கு அழகாக பட்டுப் புடவை கட்டாமல் இப்படியா உடை அணிவது?. இதுவும் அழகாகத் தான் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை.
இருப்பினும் பட்டுப்புடவை உடுத்தி, தலை நிறைய பூ வைத்திருந்தால் இதை விட நன்றாக இருந்திருக்கும். தல தீபாவளியும் அதுவுமா ஏன் இப்படி செய்தீர்கள் மகா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!