• Apr 18 2024

யாருடா நீ இத்தனை நாள் எங்கடா இருந்த?- சண்டைக் காட்சியில் நடித்த நடிகருக்கு விஷால் செய்த உதவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஷால் இவர் நடிகராக மட்டுமல்லாது மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் புரிந்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வீரமே வாகை சூடும்.இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு என்பவர் நடித்திருக்கின்றார்.இந்தப் படத்தில் ஒரு முக்கியமான  காட்சியில் நடிகர் விஷால்  சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும். 


அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில்  அடிபட்டு  இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால்  முதலில்  சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம்  என்று இயக்குநர் சரவணன்  திட்டமிட்டு இருந்தார். படப்பிடிப்பில் ஏனோ சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார். ஆனால்  சோமு  சினிமாவுக்கு மிகவும் புதிது. அவர் சண்டைப் பயிற்சி மற்றும் இது போன்ற சாகச காட்சிகள் செய்வதில் பரிச்சயம் இல்லாதவர்.

 இருந்தாலும் இயக்குநர்  சரவணன் நடிகர் சோமுவிடம்  இந்தக் காட்சியைப் பற்றி விளக்கிக் கூறிய பொழுது புதுமுக நடிகர் சோமு மிகுந்த ஆர்வத்துடனும் நான் இதைச் செய்கிறேன் என்று துணிச்சலுடன் முன்வந்தார்.இந்தக் காட்சியைப் படம் பிடித்த பொழுது   சோமு எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நீண்ட காட்சியில் நடிப்பதைப் பார்த்த விஷால் மிகவும் வருத்தப்பட்டார். உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து தன்னுடைய காரில் உள்ள தனது சொந்த பாதுகாப்பு சாதனங்கள்,முன்புறம் போடும் பேட், பின்புறம் போடும் பேட் மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.


 அது மட்டுமல்லாமல் அதை தன் கையாலேயே சோமுவுக்கு அணிவித்துள்ளார். எந்தவித ஒரு பின்பலமும் இல்லாமல் ஒரு குணசித்திர நடிகராக வந்த தனக்கு ஒரு முன்னணி  கதாநாயக நடிகரே தன் கையால் இதுபோன்ற உதவிகளைச் செய்ததைக் கண்ட சோமு, மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். அதே போல் முன்னணி நடிகர்கள் தங்களுடைய பொருளை யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள் ஆனால் விஷால் அப்படி செய்யாமல் தன்னுடைய பாதுகாப்பு சாதனைகளை குணச்சித்திர நடிகருக்கு கொடுத்துள்ளார். உண்மையில் உதவி செய்ய நினைக்கும் அந்த மனசு தான் கடவுள் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடைய ஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பரிசாகப் பெற்றார்.படப்பிடிப்பிடத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் நடிகர் விஷால் , "  யாருடா நீ  இத்தனை நாள் எங்கடா இருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு '' என்று தன் மனதாரப் பாராட்டிச் சென்றிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement