• Apr 19 2024

ஆசை நிறைவேறுமா..? ஓப்பனாக கேட்டும் நடக்கவில்லையா...? வாய்ப்பிற்காக காத்திருக்கும் வரலட்சுமி..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிரபல நடிகர் சரத்குமார் சாயாவின் மகளான வரலட்சுமி சரத்குமார் தற்போது தென்னிந்தியாவில் அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரபல நடிகரின் மகளாக இருந்த போதிலும் முன்னணி நடிகைக்கான வாய்ப்பை இதுவரை பெறாத வரலட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.  

தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவுவிடாமல் குணச்சித்திர வேட ங்கள் முதல் வில்லி காதாபாத்திரம் வரை அனைத்தையும் ஏற்று அதில் தனது திறமையை பிரதிபலித்து வருகிறார்.வரலட்சுமி முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார்



முதல் படத்திலேயே சிம்புவுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக பாலாவின் தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரியின் விக்ரம் வேதா போன்ற வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களிடத்தே தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான சண்டக்கோழி படத்தின் மூலம் வில்லியாக அவதாரம் எடுத்த வரலட்சுமிக்கு அடுத்தடுத்து விஜய்யின் சர்கார், தனுஷின் மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் இதையடுத்து தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.



தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் வரலட்சுமி. குறிப்பாக தமிழில் பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யசோதா, சபரி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. 



இந்நிலையில், நடிகை வரலட்சுமி, சமீபத்திய பேட்டியில், தனக்கு நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றும் ஆனால் அதுபோன்ற பட வாய்ப்புகள் தனக்கு வருவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். தனக்கு பெரும்பாலும் வில்லி வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வருவதாகவும், யாராச்சும் காமெடி படங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று ஓப்பனாக வாய்ப்பு கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement