• Apr 24 2024

ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸானால் தோல்வியடையுமா?- ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த . இப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.இதனைத் தொடர்ந்து  பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.  இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், ராக்கி பட ஹீரோ வஸந்த் ரவி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.


இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதுவரை 60 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆக்ஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


 நெல்சன் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகி தோல்வியை சந்தித்தது. அந்த செண்டிமெண்டால் ஜெயிலர் படத்தை தள்ளிவைத்தார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. ஒரு சிலரோ, ஏப்ரல் 28-ந் தேதி பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளதால் தள்ளிவைத்துள்ளார்கள் எனவும் கூறி வருகின்றனர். ஆனால் ஜெயிலர் படக்குழு இதுகுறித்து எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement