• Apr 20 2024

ஹவுஸ்மேட்டின் செயலால்... ராபேர்ட்டைத் தொடர்ந்து வெளியேறுவாரா ரச்சிதா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகலாவிய ரீதியில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தற்போது தமிழில் 6-ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என தொடர்ந்து பலர் வெளியேறி வர நேற்றைய தினம் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருக்கிறார்.


இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதல் ப்ரோமோவின்படி வெளியேற்றப் பட்டியலுக்கு ஏராளமான ஹவுஸ்மேட்ஸ் ரச்சிதா மற்றும் குயின்ஷியின் பெயரையே கூறி இருந்தனர். அதற்கான காரணமாக ரச்சிதா வெளிப்படையாக எதையும் சொல்ல மாட்டார் எனக் கூறி இருந்தனர். அதுமட்டுமல்லாது ஹவுஸ்சமேட்ஸ் பலரினதும் இந்தவார ராக்கெற் ரச்சிதா போல் தான் தெரிகின்றது.


மேலும் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் செய்த விஷயங்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்த அதுவே குறைவான வாக்குகள் பெற்று அவர் வெளியேற காரணமாக இருந்தது. நன்கு விளையாடக் கூடிய ஒரு நபர் இப்படி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு வருத்தத்தை  கொடுத்துள்ளது. அத்தோடு இனி நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் குறைந்து விடும் எனக் கூறி இருந்தனர்.

அதுமட்டுமல்லாது ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது ரச்சிதா அழுவார் எனப் பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவரோ எந்த விதமான ரியாக்சனும் இல்லாமல் ஒரு ஷோபாவில் போய் தனியாக உட்கார்ந்து கொண்டார்.


இந்நிலையில் அதிகளவான சக போட்டியாளர்கள் குயின்ஷி மற்றும் ரச்சிதா பெயர்களை கூறி இருப்பதால், ராபர்ட் மாஸ்டரைத் தொடர்ந்து ரச்சிதா வெளியேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடும் என பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். எது எவ்வாறாயினும் இந்த வாரம் உண்மையிலும் யார் வெளியேறப் போகின்றார் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement