• Apr 18 2024

அதைப் பற்றி ஏன் கேட்கவில்லை...கமல் மீது கடுப்பில் ரசிகர்கள்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அந்த விஷயத்தை பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தது ரசிகர்களை  பெரும் ஏமாற்றமடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர்  தான் அமுதவாணன். விஜய் டிவி மூலமாகதான் பிரபலமானார். விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி என கலக்கி வந்தார். அத்தோடு விஜய் டிவியில் திறமையான பலரையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். பாலா இயக்கத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்த தாரை தப்பட்டை படத்திலும் நடித்திருந்தார் அமுதவாணன். அமுதவாணனின் நகைச்சுவையான அணுகு முறைக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

 ஆரம்பத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் மற்றும் காமெடியாகவும் விளையாடி வந்தார் அமுதவாணன். ஆனால் தற்போது சிறுசிறு விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி ஹவுஸ்மேட்டுக்களுடன் சண்டை போட்டு வருகிறார்.அத்தோடு  பிக்பாஸ் வீட்டில் மற்றவர்கள் பற்றி குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் அமுதவாணன். எனினும் குறிப்பாக எப்போதும் விக்ரமனுடன் மல்லுக்கு நின்று வருகிறார் அமுதவாணன். இதனால் சமூக வலைதளங்களில் அமுதவாணனை கன்னபின்னாவென விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இவ்வாறுஇருக்கையில்  கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அநாகரீக செயலில் ஈடுபட்டார் அமுதவாணன். அதாவது பெண் போட்டியாளர்கள் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது மைக்கை கழட்டி வைத்துவிட்டு கதவின் இடுக்கு வழியாக அவர்கள் குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்தார். அத்தோடு அமுதவாணனின் இந்த மோசமான செயலை பார்த்த பிக்பாஸ், அமுதவாணன் மைக்கை மாட்டுங்கள் என எச்சரித்தார். இதனால் மிரட்டு போன அமுதவாணன் மைக்கை மாட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.



அத்தோடு பிக்பாஸ் வீட்டிலும் நடந்ததை யாரிடமும் கூறாமல் நல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார் அமுதவாணன். அமுதவாணனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. எனினும் இதனை பார்த்த நெட்டிசன்கள், அமுதவாணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வார இறுதி நாட்களில் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கும் கமல் அமுதவாணனைக் கண்டிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் கமல்ஹாசன் அந்த விவகாரம் குறித்து வாயே திறக்கவில்லை.



இதனால் அப்செட் ஆகியுள்ளனர் ரசிகர்கள். அத்தோடு கமல்ஹாசன் நேரடியாக விசாரிக்காவிட்டாலும் மறைமுகமாகவாது அமுதவாணனை கண்டித்திருக்கலாம் என அதிப்ருதியை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்தோடு  சிலர் அமுதவாணன் விஜய் டிவி புராடெக்ட் என்பதால்தான் பிக்பாஸும் அவரை கண்டிக்கவில்லை கமலும் கண்டிக்கவில்லை என விளாசி வருகின்றனர். மேலும் நடிகர் சரவணன் எப்போதோ செய்த தவறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதால் அவரை தீவிரவாதி போல் வெளியேற்றிய பிக்பாஸ், அமுதவாணன் செய்த காரியத்திற்கு ரியாக்ட்டே செய்யாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement