• Apr 20 2024

பாலாவை பாதியில் கழட்டிவிட்ட சூர்யா- வணங்கானில் இருந்து விலகியது ஏன்!

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். 


இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், , ஏழாம் அறிவு போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.


இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள்,போன்ற விருதுகள் வென்றுள்ளார்.


இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் பாலா. 


இந்நிலையில் பாலாவின் கூட்டணியில் வணங்கான் படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் இப்படம் ஷூட்டிங்கும் நடைபெற்றது. இதையடுத்து பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை ஏற்பட்டதால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 


ஆனால் அப்போது நிறுத்தப்பட்ட ஷூட்டிங் அதன்பின் தொடங்கப்படவே இல்லை. இடையே படத்தில் கதையை பாலா மாற்றி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement