• Apr 25 2024

நான் ஏன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றேன்?: ப்ரியங்கா சோப்ரா சொன்ன ஷாக் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வாடகைத் தாய் மூலம் மால்தி மேரிக்கு தாயானது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

தளபதி விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானவர் உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா. அத்தோடு பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அவர் ஹாலிவுட் பக்கமும் சென்று பிரபலமாகிவிட்டார். ஹாலிவுட் சென்ற இடத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தைக்கு தாயானார். மேலும் அந்த குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயர் வைத்தார்கள்.


வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதற்காக ப்ரியங்கா சோப்ராவை சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்தார்கள், கிண்டல் செய்தார்கள். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் முதல் முறையாக வாடகைத் தாய் விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.அத்தோடு  அவர் தெரிவித்த காரணத்தை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ப்ரியங்கா சோப்ரா தெரிவித்ததாவது, எனக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் தாயாக முடியவில்லை. இதையடுத்தே வாடகைத் தாயை நாடினேன். எனக்கு வேறு வழியில்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பாக்கியம் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறேன். அத்தோடு எங்களின் வாடகைத் தாய் மிகவும் அன்பானவர். எங்கள் பிள்ளையை 6 மாதங்கள் பாதுகாத்தார் என்றார்.


ப்ரியங்கா சோப்ரா மேலும் தெரிவித்ததாவது, உங்களுக்கு என்னை பற்றி தெரியாது. எனக்கு என்ன நடக்கிறது என்றும் தெரியாது. என்னுடைய மற்றும் என் மகளுடைய உடல்நலம் பற்றி நான் வெளியே தெரிவிக்காததால், பொது மக்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இல்லை என்றார். அத்தோடு மால்தி மேரி குறை மாதத்தில் பிறந்தார். மால்தி பிறந்ததில் இருந்தே மருத்துவமனையே கதி என்று இருந்த ப்ரியங்காவை அவரின் தங்கையான நடிகை பரினீத்தி சோப்ரா பாராட்டினார்.

இயற்கையாக தாயாக முடியாத வேதனை ப்ரியங்காவுக்கு இல்லாமல் இருக்காது. இந்நிலையில் வாடகைத் தாயை நாடியதற்கு போய் அவரை விளாசுவது தவறு என ப்ரியங்காவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு ப்ரியங்கா சோப்ரா மட்டும் அல்ல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் வாடகைத் தாய் மூலம் தான் தாயானார். இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாராவையும் சமூக வலைதளங்களில் விளாசினார்கள். தன்னால் குழந்தை பெற முடியாத வேதனையில் இருந்த நயன், வாடகைத் தாய் மூலம் இரண்டு மகன்களுக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement