• Apr 19 2024

ஏன் இப்படிப் பண்றீங்க- கார்த்தியின் மனைவி அவரை டார்ச்சர் பண்றாரா?- சர்ச்சையைக் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

stella / 11 months ago

Advertisement

Listen News!


 ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பற்றியும் அவரது மனைவி குறித்தும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசிய வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த நிலையில், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா என அனைத்து ஹீரோயின்களுடன் ஜொள்ளு விட்டுப் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மேலும், நடிகை த்ரிஷாவுடன் அகநக பாடல் காட்சியில் செம ரொமான்டிக்காக கார்த்தி நடித்ததை பார்த்து அவரது மனைவி ரஞ்சினிக்கு பொறாமை ஏற்பட்டு இப்படியெல்லாம் ஏன் நடிக்கிறீங்க, உங்க அண்ணன் சூர்யா சில படங்களில் ஹீரோயினே இல்லாமல் நடிப்பது போல நீங்களும் நடிக்கலாமே என அவரை டார்ச்சர் செய்ததாக பேசி உள்ளார்.


சினிமா நடிகர்களின் மனைவிகள் பலரும் தங்கள் கணவர் இன்னொரு நடிகையுடன் ஒட்டி உறவாடி, முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என படத்திற்காக நடிக்க வேண்டிய நிலையில், மனதளவில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் வரத்தான் செய்யும் என்றும் நடிகர்கள் எந்த அளவுக்கு தங்கள் மனைவியிடம் உண்மையாக இருக்கின்றனரோ அவர்கள் இடையே எந்தவொரு சண்டையும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி ரஞ்சினியை 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு கந்தன் மற்றும் உமையாள் என இரு குழந்தைகள் உள்ளனர். இதுவரை பெரிதாக எந்தவொரு சர்ச்சையிலும் நடிகர் கார்த்தி சிக்காத நிலையில், தேவையில்லாமல் அவரையும் அவர் மனைவி பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசுவது சரியல்ல என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் விளாசி வருகின்றனர். 


ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் 2, அலெக்ஸ் பாண்டியன், விருமன் என எல்லா படங்களிலும் ஹீரோயினுடன் நெருக்கமாகத்தான் கார்த்தி நடித்து வருகிறார். ஆனால், இதுவரை அவரது மனைவி எந்த பிரச்சனையும் பண்ணாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நெருக்கமாக கூட நடிக்காத நிலையில், டார்ச்சர் செய்கிறாரா என விளாசி வருகின்றனர்


Advertisement

Advertisement

Advertisement