• Apr 19 2024

திடீர் திருமணம் ஏன்? - மனம் திறந்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா! ஓஹோ ..இதான் காரணமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘அந்தாரி பந்துவாயா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.அதனைத்தொடர்ந்து தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ ‘காஞ்சனா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதனையடுத்து சீரியல் பக்கம் சென்ற அவர், ரோஜா சீரியலில் நடித்ததின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சீதா ராமன்’ சீரியலில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவரது இந்த திடீர் கல்யாணம் சின்னத்திரை வட்டாரத்திலும் பேசு பொருளானது. இந்த நிலையில் அவர் திடீரென்று கல்யாணம் செய்து கொண்டதற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.இன்ஸ்டாகிராம் லைவில் இது குறித்து பேசிய அவர், “ என்னுடைய திருமணம் நிச்சயம் எல்லோருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கடைசியாக நான் மகிழ்ச்சி, என்னுடைய குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 

இது ரகசியமான திருமணம் கிடையாது. பாஸ்போர்ட் பிரச்சினையால் என்னுடைய குடும்பத்தால் கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். கணவர் தரப்பில் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. விரைவில் அவர்கள் சம்மதத்துடன் பெரிய அளவில் திருமணம் நடக்கும் என்று நம்புகிறோம்.” என்று பேசினார் .


Advertisement

Advertisement

Advertisement