பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் பிக்பாஸ் ஜனனி குணசீலன். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதைத் தொடர்ந்து தற்பொழுது அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் தான் பங்கு கொண்டதற்கான காரணத்தையும் ப்ரோமோ வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.
அதில் நான் மற்ற பிரபலங்கள் பற்றி ஷோ பண்ணும் போது ரிவியூ கொடுத்திருக்கின்றேன். என்னைப் பற்றியும் ரிவியூ கொடுக்கணும் என்று ஆசைப்பட்டதால தான் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றேன். அத்தோடு இவரின் இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்க்க சாய் பல்லவி போல இருக்கின்றாரே. அடுத்த சாய் பல்லவி இவராகக் தான் இருக்குமோ எனக் கூறி வருகின்றனர்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் திகதி பிறந்திருந்தார். இவருக்கு சினிமாத்துறையில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக இலங்கையில் பிரபல்யமான சேனல் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பூட் ரிவியூ கொடுப்பவராகவும் இருந்திருக்கின்றார்.
மேலும் இவங்க பிக்பாஸ் வரக் காரணம் இவருடைய 5 வருட சபதம் தானாம். பிக்பாஸ் போக வேண்டும் என்ற கனவினை மெய்படுத்தவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். அத்தோடு இவர் பல டிக்டாக் வீடீயோக்கள் செய்து பதிவிட்டிருந்ததோடு டிக் டாக் டோஸ் என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கின்றாராம்.
மேலும் இவர் சைலண்டான பொண்ணு என்று பார்த்தால் நிகழ்ச்சியில் சூப்பராக விளையாடி வருகின்றாராம். இவரின் கொஞ்சும் தமிழுக்கு தமிழ் நாட்டிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றார்களாம்.இதனால் இவர் டைட்டில் வின் பண்ணுவாரா? இல்லையா? யாருடனாவது காதல் வயப்படுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!