• Apr 20 2024

யார் இந்த பிக்பாஸ் மணிகண்டன்... இவருக்கு பின்னாடி இத்தனை தியாகங்களா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இன் உடைய சகோதரர் தான் இந்த மணிகண்டன். 


இவர் ஏப்ரல் 1-ஆம் தேதி 1988 இல் பிறந்தவர். இவருடைய பிறந்தநாள் அன்று ஒவ்வொரு வருடமும் இவரது தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைத்தளங்களில் எமோஷனலான பதிவு ஒன்றினை இட்டு வருவது வழமை.

இதற்கு காரணம் என்னவெனில் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இழந்து விட்ட நிலையில் கடையசிக இவருக்கு உறுதுணையாக இருப்பது இவர் அண்ணன் மட்டுமே. இதனால் மொத்த அன்பையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணனுக்கே கொடுத்து வருகின்றார்.

அப்பா என்ற ஸ்தானத்தில் இருந்து மணிகண்டன் தான் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் பார்த்து வருகின்றார். அதுமட்டுமல்லாது சின்னத்திரையில் அதிலும் குறிப்பாக சன் டிவியில் மிகவும் பேமஸ் ஆன ஒருவராகவும் இவர் இருக்கின்றார். 


இந்தளவுக்கு இவர் பேமஸ் ஆக காரணம் சன் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி' என்ற நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் தான் இவரின் காதல் மனைவியை இவர் முதன்முதலாக பார்த்திருந்தார்.

இவரின் குடும்பத்தில் மொத்தமாக 6 பேர். அப்பா, அம்மா, 2அண்ணன்கள், 1தங்கை என மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். இவரின் அப்பா ஒரு பிசினஸ் மாக்னென்ற். அதாவது தயாரிப்பாளராக இருந்திடுப்பதோடு தெலுங்கில் மட்டும் 30 படங்கள் பண்ணியிருக்கார். அத்தோடு தமிழிலும் ஒரு சில படங்களை தயாரித்திருக்கார்.

இவ்வாறாக  தெலுங்கு சினிமாவில் மிகவும் பேமஸாக இருந்த குடும்பம் தான் இவர்களது குடும்பம். தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததும் இவர்களின் நிலை ரொம்பவே பின்னடைந்து விட்டது. தமிழில் படங்களை வெளியிட்ட போது நஷ்டம் அடையத் தொடங்கியது.

அதனை ஈடு செய்வதற்காக ஒரு குடிகாரராக மாறி இருக்கார் இவரின் அப்பா. அப்பா பெயர் ராஜேஷ். அம்மா பெயர் நாகமணி. இவரின் அப்பா தினமும் இப்படி மது அருந்துவதை பார்த்த இவரின் இரு அண்ணன்களும் அப்பாவிற்கு சப்போர்ட் பண்ணுவோம் என்று நினைக்கும் போது அவர் காலமடைந்து விட்டார்.

அவரின் இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாத அளவிற்கு ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இவரின் அம்மா சாறி பிசினஸ் செய்யத் தொடங்கினார். ஊருக்குள் வியாபாரம் பண்ணத் தொடங்கினார். 

நான்கு பிள்ளைகளையும் எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இவரின் அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டார். எனினும் ஒரு அதிர்ச்சி பின்னரும் காத்திருந்தது. அதாவது இவரின் பெரிய அண்ணா படித்த்து முடித்து விட்டு நல்ல வேலைக்கு போகவிருந்த நேரத்தில் இவரது அண்ணா காதலினால் தற்கொலை செய்து கொண்டார்.

சரி இந்த அண்ணா தான் நம்மள விட்டிட்டு போய்ட்டாரு. மற்ற அண்ணா ஆவது நம்மள பார்த்துக் கொள்ளுவார் என்று இருந்த நேரத்தில் மற்ற அண்ணனும் ஒரு வாகன விபத்தில் காலமாகி விட்டார்.

இவ்வாறாக அடுத்தடுத்து நிகழ்ந்த இழப்புக்களை தாங்க முடியாத இவரது அம்மாவும் உடல் நலம் குன்றி விட்டார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தான் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கினார். கிட்டத்தட்ட 2,3 வருஷத்திற்கு இடையில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடத் தொடங்கினார்.

தங்கை ஐஸ்வர்யாவிற்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருந்தமையால் வாய்ப்பு தேடி சுமார் 5 வருடங்கள் தங்கைக்காக அலைந்தாராம். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் 'அவள்' என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினாராம்.

இதனைத் தொடர்ந்து சீசன் நம்பர் 4 ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு தான் தன்னுடைய காதல் மனைவி சோபியாவை சந்தித்து கல்யாணம் பண்ணிக் கொண்டார். இவருக்கும் இவரது மனைவி சோபியாவிற்கும் வயதில் 5 வருடங்கள் வித்தியாசம் உண்டு.

தற்போது இவரின் மனைவியும் மகனும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற 'சூப்பர் மாம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்கள். இவ்வாறாக தற்போது தனது குடும்பத்தினருடன் சந்தோசமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார் மணிகண்டன்.


Advertisement

Advertisement

Advertisement