• Apr 19 2024

பிக்பாஸ் வீட்டில் யார் யாரெல்லொம் இருக்கனும் எண்டு எதிர்பார்க்கிறீங்க... நடிகர் சிம்பு ஓபன் டாக்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர் என்றால் அது சிம்பு தான். சிம்பு என்றாலே வம்பு என சொல்லும் அளவுக்கு இவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் எந்தவித சர்சைகளிலும் சிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறுஇருக்கையில் , இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியொன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவரிடம் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதற்கு செம கூலாக அவர் பதிலும் அளித்திருக்கிறார்.

அதன்படி முதலில், தமிழ்நாட்டில் தாமரை மலருமா... மலராதா என்கிற கேள்வியை ரசிகை ஒருவர் கேட்கிறார். பாஜக-வை சூசகமாக சுட்டிக்காட்டி தான் இந்த கேள்வி அவரிடம் கேட்டுள்ளார். எனினும் இதற்கு பதிலளித்த சிம்பு, பொதுவாக எடுத்துக்கொண்டால் தாமரை தண்ணி ஊற்றினாலே வளரும் என தனக்கே உரித்தான பாணியில் சிம்பு அளித்த பதிலை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

எனினும் அடுத்ததாக, மற்றொரு ரசிகை ஒருவர், மோடியை பார்த்தால் என்ன கேள்வி கேட்பீங்க என கேட்க, இதற்கு சிம்பு அளித்த பதில் தான் அல்டிமேட். மோடியை பார்த்தால், சார் டீ-யே குடுத்துட்டு இருந்திருக்கலாமோனு தோணுதா சார்னு கேட்ருப்பேன் என சொல்லிவிட்டு சிம்பு குலுங்கி குலுங்கி சிரித்தார். 

இதையடுத்து ரசிகர் ஒருவர் சிம்புவிடம், உங்களது வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில், உங்களது தாயார் எவ்வளவு உதவியாக இருந்துள்ளார் என்பது பற்றி கேட்டார். இதற்கு பதிலளித்த சிம்பு, பீப் பாடல் சர்ச்சையின் போது நடந்த சிலவற்றை கூறினார். அந்த சர்ச்சைக்கு முன்பு வரை என அம்மா ஒரு பேட்டி கூட கொடுத்ததில்லை. அந்த சமயத்தில் உலகமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் எனக்காக உடனிருந்து குரல் கொடுத்தது என்னால் மறக்க முடியாது என சிம்பு கூறினார்.

இதன் பின்னர் ரசிகை ஒருவர், உங்க வீடு தான் பிக்பாஸ் என்றால் உங்க கூட யாரெல்லாம் இருக்கணும்னு நினைப்பீங்க என கேள்வி கேட்டார். இதற்கு சட்டென பதிலளித்த சிம்பு, என் வாழ்க்கையே பிக்பாஸ் தாங்க, நான் எதையும் மறைச்சதில்ல என சொன்னார் . இவ்வாறு சிம்பு ஓப்பனாக பேசிய அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில்  டிரெண்டாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement