• Apr 25 2024

சீரியலில் இருந்து விலக காரணம் என்ன..? உண்மையை உடைத்த ராகவ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல தொலைக்காட்சி சேனல்களில் போட்டி போட்டு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சன் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செவ்வந்தி” சீரியல். 

இந்த சீரியலின் உடைய கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வருவதோடு சமீபத்தில் நடிகர் அர்னவ் உடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல சர்ச்சைகள் வெளி வண்ணம் இருக்கிறது. இதே சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் ராகவ் நடித்து வந்தார். 

இந்நிலையில் தற்போது ராகவ் சீரியலை விட்டு விலகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி நிலையில் அது பற்றி அவர் தனது ரசிகர்களுடன் உண்மை எது என்பதை கூறியுள்ளார்.

அதாவது இவர் பெரும்பாலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது கிடையாதாம்.இவர் படங்களில் நடிப்பபதற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்துவாராம்.இவர் முதல் நடிக்கும் சீரியல்களில் கொஞ்ச நாள்  தான் நடிப்பாராம்.இவருக்கு பெரிய கதாப்பாத்திரம் கிடைத்தது இல்லையாம்.

ஆனால் செவ்வந்தி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரம் கிடைத்து உள்ளது.இதில் இவர் நடிக்கும் கதாப்பாத்திரம் ஏற்களவே இறப்பது போல தான் கதை இருந்துள்ளது.ஆனால் இவர் நடித்ததால் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு கிடைக்க கொஞ்ச நாள் இதை நகர்த்தி சென்றுள்ளனர் என கூறியுள்ளார்.இல்லாவிடில் இதை ஏற்கனவே முடித்து இருப்பார்கள்.அதாவது நான் விலகவில்லை கதையின் படியே தான் சென்றது எனக் கூறியுள்ளார்.

நான் இதில் நடிக்காமல் விலகியதை கேட்டு பலரும் எனக்கு அழைப்பு விடுத்து கவலைப்பட்டார்கள்.கொஞ்ச நாள் நடித்ததற்கே இவ்வளவு அன்பு கிடைத்தது எனக்கு ஒரு மாதிரி உள்ளது.ஆனால் இந்த அன்பு உள்ளங்களுக்கு நான் கடமை பட்டு இருக்கிறேக் எனக் கூறியுள்ளார்.

இதோ அவர் பேசிய முழுமையான  வீடியொ...




Advertisement

Advertisement

Advertisement