• Apr 25 2024

திடீர் சந்திப்பை மேற்கொண்ட 'தி லெஜண்ட்' சரவணன் மற்றும் இயக்குநர் சுந்தர்சி... காரணம் என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் சரவணன். இவர் தற்போது தொழிலைத் தாண்டியும் சினிமா பக்கமாகத் தனது முழு கவனத்தையும் திருப்பி உள்ளார்.

அதாவது சரவணன் ஹீரோவாக அறிமுகமான 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் ஆனது கடந்த ஜூலை மாதம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியானது.


இப்படத்தை 'விசில்' படத்தினை இயக்கிய இயக்குநர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். மேலும் பல கோடி ரூபாயில் பிரம்மாண்ட பொருட்செலவில் லெஜண்ட் சரவணன் இப்படத்தைத் தயாரித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார்.


அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து பிரபு, விவேக், யோகிபாபு, விஜயகுமார், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இவ்வாறு மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. 


இதன்காரணமாக இப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் முடிவையும் திடீரெனக் கைவிட்டு விட்டார் அண்ணாச்சி. இருப்பினும் மனம் தளராது இதனைத் தொடர்ந்தும் அவர் தான் நடிக்கும் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு  வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் சுந்தர் சி, லெஜண்ட் சரவணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இந்த விடயம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டும் வருகிறது. 


எது எவ்வாறாயினும் இவர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில் படம் இயக்குவது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும் வேறு சில காரணங்களுக்காகத் தான் அவரை சுந்தர் சி சந்தித்து பேசி விட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement